கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூறைதீர் கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இணை இயக்குநர் ஏ.புஸ்பாபாய் மற்றும் துணை இயக்குநர் கே.மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) த.சீ.சேஷாத்ரி, மாவட்ட கருவூல அலுவலர் டி.சி.எல்.நடராஜன், உதவி கருவூல அலுவலர் எஸ்.ராமர் மற்றும் பிற துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்குறைதீர் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக 48 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 33 விண்ணப்பங்களுக்கு பல்வேறு அரசு துறை அலுவலர்களிடமிருந்து பதில் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 15 விண்ணப்பங்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

குடும்ப நல நிதி 50 ஆயிரம் ரூபாய் வீதம் இரு பயனாளிகளுக்கு ஒட்டு மொத்த தொகையாக 10 ஆயிரம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வூதியர்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...