மூளை சாவு அடைந்தவர் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

பொள்ளாச்சி தாலுகா, அங்களக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமியின் மனைவி வள்ளியம்மாள் (47). கடந்த 28 ஆம் தேதியன்று ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள அவரது மகன் கம்பெனியில் இருந்து அரவது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து சென்றுகொடிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதியன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் கிருஷ்ணசாமி மற்றும் மகன் மனோஜ்குமார் இணைந்து வள்ளியம்மாள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.

அவரது இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் தேவைப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு சிறந்த முறையில் பொருத்தப்பட்டது. 

இதுகுறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய வள்ளியம்மாள் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...