தண்ணீர் இன்றி தவிக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகள் இயங்கி வரும் நிலையில் மனு அளிக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். தற்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த துறைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.



இதன் காரணமாக பழைய கட்டிடத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் இந்த அலட்சிய நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அரசு ஊழியர் கூறும் போது, "தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் தற்காலிகமாக கழிவறைகளும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகியுள்ளோம். மதிய உணவு அருந்திய பின் கைகளை கழுவுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறாம்" என தெரிவித்தார். 

பழைய கட்டிடத்தில் இன்னும் பல துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் தண்ணீர் நிறுத்தியது அங்கு வரும் பொதுமக்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே புதிய கட்டிடத்திற்கு மாறும் அலுவலகங்களில் உள்ள குப்பைகள் ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு உருவாகி வருகிறது. புதிய கட்டிடத்திலும் கழிவறைகள் திறக்கப்படாமல் இருப்பதால் அங்கும் இதே நிலை நீடித்து வருகின்றது.

சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு துறைகள் செயல்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...