உணவு பொருள் மீது ஜிஎஸ்டி வரியை அதிகரித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை அதிகப் படித்திய மத்திய அரசைக் கணடித்து வணிகர் சங்கத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில், சிறிய உணவகங்களுக்கு 5 சதவிகிதம் வரியும், நடுத்தர ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிப்பும், ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.

முந்தைய காலத்தைவிட கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள இந்தவரி விதிப்பால், உணவகங்களுக்கு வரும் பொது மக்களை பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடியிருக்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல தமிழகம் முழுவதும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணையத்தின் மூலம் விற்பனை செய்வதை கண்டித்தும், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே வரி என்கின்ற முறையில் மாறுதல் செய்து வரிவிதிப்பை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 300 ரெஸ்டாரண்டுகளும், 1200 பேக்கரிகளும், பல ஆயிரக்கணக்கான மருந்து விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தமாதம் மீண்டும் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது அதிகரிக்கப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...