லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் வால்பாறையில் புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சார்பில் வால்பாறை கோடை விழாவின் ஒருபகுதியாக கிராமப்புற ஓவியங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



இக்கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் விக்னேஷ் ராஜ், முருகேசன், வீரகுமார் உள்ளிட்ட 14 பேர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். 

முன்னதாக, வால்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவிய அறக்கட்டளை செயலாளர் விக்னேஷ் ராஜ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யை கவுரவித்து உரையாற்றினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...