கோவையில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து


கோவை இராமநாதபுரம் பகுதியில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இங்கு அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வந்து செல்வர். 

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்-யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த மருத்துவ கழிவுகள் மீது தீ பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் அந்த தீ அறையில் இருந்த குளிர்சாதன கருவியும் (ஏ.சி) தீப்பிடித்து எரிந்தது. 

இதையடுத்து ஊழியர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவியது.



இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றினர். பின்னர் அவசர சிசிக்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளை மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரத்தில் பிரபலமான ஜெம் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனையில் தீ பற்றியவுடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...