ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது தற்காலிகமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும்.

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017 ஆம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 15ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்ய எலக்ட்ரீசியன், எம்எம்வி, பொருத்துனர், மின்சார கம்பி செலுத்துபவர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக 2017 மே 31 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசால் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணங்கள் முற்றிலும் இலவசம். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், பயிற்சி பெரும் அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் தகுதி தொழிற் பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை). அனைத்து பயிற்சியாளர்களுக்கும் என்ஐஎம்ஐ புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9942730555, 8940837678, 9894783226 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...