மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றம்

கோவை மாவட்டம், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு திங்கட்கிழமை (இன்று) காலை 11 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் இச்சேவையை துவக்கி வைத்தார்.

நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தேசிய தகவல் மைய தகவல் அலுவலர் ரவிக்குமார், உதவி தகவல் அலுவலர் வெங்கடேஷ், பராமரிப்பு ஆய்வாளர்கள் தவமணி, அயூப்ஜான், கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் (பொறுப்பு) முத்துராஜா, கண்காணிப்பாளர் மோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ், வட்டத்துணை ஆய்வாளர் சிவகுருநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் இதர உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...