ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலுக்கு 2014-யில் ஆன ஒப்பந்த கூலியை கேட்டு நடைபெற்ற விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று மாவட் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுக்க வேண்டும் என்றும், இனி எக்காரணம் கொண்டும் ஒப்பந்த கூலியை குறைக்ககூடாது என்றும் ஒப்பந்த கூலியை குறைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு வாரகாலம் கடந்தும் ஓரிரு ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. 

இதேபோல், 2014-யில் ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால் பலகட்ட போராட்டங்களுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 22.2.2016-யில் கோவை, திரப்பூர் மாவட்ட அமைச்சர்கள், இரண்டு மாவட்ட ஆட்சியர்களால் அவிக்கப்பட்டது.

ஆனால், ஒருசில மாதம் மட்டம் கொடுத்துவிட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடியும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த கூலி உயர்வு வழங்காமல் செயல்பட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கூலியை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...