டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் மற்றும் பொட்டையாபண்டிபுரம்பு ஆகிய கிராமத்து பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் கிராமம், கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம், முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலை வழி சந்திப்பில் கல்லுக்குழி பேருந்து நிறுத்தம் அருகே ரத்தினசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 322 என்னும் எண் கொண்ட மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இப்பகுதி, விவசாய நிலம் மற்றம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த டாஸ்மாக் கடையினை கடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள், அருகில் உள்ள விவசாயிகள் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு மதுகுடிக்க வருவோரால் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...