சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 11 லட்சம் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 15 ஆயிரத்து 450 பேர் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்தால் கருணை மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்கி வருவது நடைமுறை. அதன்படி இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் அப்பாடத்திற்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. ஆனால் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சி.பி.எஸ்.இ) இம்முடிவுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடியாக தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி கருணை மதிப்பெண் இன்றி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை திடீரென ரத்து செய்யக் கூடாது என்று கூறி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையால் தள்ளிப்போன சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...