குன்னூரில் 59-வது பழக்கண்காட்சி கோலாகலமாக இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜுனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாபழம், பம்ளிமாஸ், முலாம் பழம் வாழை பிளம்ஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை டன் திராட்சை மற்றும் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காளையை இளைஞர் அடக்குவது போன்ற அமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 



மேலும், பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள காளை மாடு, ஆடு, செம்மறி ஆடு, காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.



மேலும், அரிய வகை பழங்களான பீச், ப்ளம், விக்கி உள்ளிட்ட 120 வகைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பழக்கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...