தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைந்த அளவு சிமெண்ட்டையே வழங்குவதாகவும் அமைச்சர் வேலுமணி  தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் இன்று  கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார். பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து  வருகின்றது என்றார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை தமிழக அரசு நிகழ்ததி இருக்கன்றது என தெரிவித்தார்.மேலும் லாரிகள் மூலம் 6700 நடை குடிநீர்  சென்னையில் உள்ள மக்களுக்கு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைவாகவே சிமெண்ட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் உருவப்படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி,எதிர்கட்சிகளுக்கு தங்கள் குற்றப்பின்ணனி குறித்தும் தெரியும் எனவும் சட்டப்படி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...