எஜுதர்மா சார்பில் கொடையாளர்கள், பயனாளர்கள் இன்று சந்திப்பு

எஜுதர்மா அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, புதிய ஆராய்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு உதவி வருகிறது. 



இதில், உலகம் முழுவதும் 700 கொடையாளர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதில், தமிழகத்தில் 150 பேர் எஜுதர்மா மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இன்று, மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வரும் கொடையாளர்களும், மாணவ பயனாளர்களும் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இநிகழ்ச்சியில் 30 நிதி உதவியாளர்கள், 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் எஜுதர்மா மூலம் வழங்கப்படும் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சோர்வடையாமல் தங்களது இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் இயக்குநர் ஆர்.ரவிச்சந்தின், தற்போது எஜுதர்மா மூலம் பயனடைந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பிற மாணவர்களுக்கு, கல்வி மேற்கொள்ள சிரமப்படுவோருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, ரேடியோ மிர்ச்சி புகழ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...