குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்- மெத்தனம் காட்டும் மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக குறிப்பாக கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் தண்ணீர் விநியோகக் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி, காந்திபுரம் வார்டு எண் 52-க்கு உட்பட்ட நூறடி சாலை எண்- 1 வீதி தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யும் பாதாள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஒடி வருகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையில் சப்பை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த வார்டுக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தும் இன்று வரை இப்பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு விட்டு, தண்ணீரை வீணடிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...