நகர்ப்பகுதியை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல, சிஎம்சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் தயக்கம்

சி.எம்.சி., காலனிக்கு பின்புறம், சிட்டி மாநகராட்சி பள்ளிக்கான மைதானம் உள்ளது. அதன் ஓரத்தை ஆக்கிரமித்து, 400 குடும்பங்கள் ஓட்டு வீடு அமைத்து, குடியிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். இப்பகுதிக்கு பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. உப்புத்தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், வீட்டுக்கு முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. மின் வசதி இல்லாததால், அருகில் உள்ள சி.எம்.சி., காலனியில் தற்காலிக இணைப்பு பெற்று, தற்போது பயன்படுத்துகின்றனர். 



இப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனை சந்தித்து, 'மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்' எனக்கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு ரூபாய் 377 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்; 'சி.எம்.சி., காலனி மைதானத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். போதிய அடிப்படை வசதியில்லை. காலனியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறோம். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் கல்வி பாதிக்கிறது. புதிதாக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும்' என மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை' என்றும் மாறாக, வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இடம் பெயருமாறும் கூறினார். 

இங்கு வசிக்கும் பெரும்பாலனோர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை 5 மணியளவில் பணிக்கு செல்லவேண்டும். இதனால் வெள்ளலூர் பகுதியில் இருந்து வர பேருந்து வசதி கிடையாது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இங்கு உள்ளவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். எனவே கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களுக்கு சிஎம்சி காலனி மைதானத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டவும், சி.எம்.சி., காலனி குடியிருப்பை செப்பனிட மதிப்பீடு தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை. நகர்ப்பகுதியை விட்டு, அங்கு இடம் பெயர்ந்து செல்ல, துப்புரவு தொழிலாளர்கள் தயங்குகின்றனர், என்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...