சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட மதுபானக்கடை, சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். 

இதனால் இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைத்தது.

இந்நிலையில் புதிதாக விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தில் போது, விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த டாஸ்மாக் கடையினை மூட நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடை முன்பாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த மறியல் போராட்டம் காரணமாக சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...