மீண்டும் கழிவு நீரால் தேங்கிய கிக்கானி மேம்பாலம் மாநகராட்சி புதிய முயற்சி மேற்கொள்ளுமா?

கோவையில் மழை பெய்தால் மட்டுமே கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கும். ஆனால் சாக்கடை கழிவு நீரால் தரைபாலம் முழுவது நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் தொடர்ந்து ஒரு மாதமாக தினமும் கழிவுநீர் உடைப்பெடுத்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது பொங்கிப் பெருகும் கழிவுநீர், பாலத்தில் அடியில் தேங்கி வாகனங்களை மூழ்கடித்து வருகிறது. அங்குள்ள மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நிரந்தரமான தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதன் விளைவு, முன்தினம் ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் வழக்கம்போல பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர், மேல்பக்க மூடியை திறந்து கொண்டு பெருக்கெடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ரயில்வே பாலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. காலை 11 மணியளவில் பாலம் முழுவதும் கழிவுநீரால் மூழ்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பிரச்சினை அதிகமாகிவிட்டதால், உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பை சரிசெய்வார்கள் என மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மாநகராட்சி தரப்பில் இருந்து யாரும் வராததால் வேறு வழியின்றி போலீஸார் அந்த சாலையை அடைத்தனர். 



பின்னர், ஞாயிறு அன்று மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் சரிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கோவையில் பொய்த மழையால் காலையில் மழைநீர் அப்பகுதியில் தேங்கியது. 11 மணியளவில் மீண்டும் அந்த சாக்கடை கழிவு நீர் வெளிவர ஆரம்பித்தது. மீண்டும் சுகாதார அலுவலர்களால் மோட்டர் மூலம் கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். பாதாள சாக்கடைக் குழாய் அடைப்பை சரி செய்வதோடு, ரயில்வே பாலத்தின் கீழே மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.



இது குறித்து மேற்கு மண்டல சுகாதார அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது; ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மண் மற்றும் குப்பை இந்த பலத்திற்கு செல்வதால் மழைநீர் வடிகாலில் மண் தேங்கி நிற்கின்றது. இதனால் மழைநீர் இப்பகுதியில் தேக்கம் ஏற்படுகிறது. பலத்தின் இந்த வேலைக்கான பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கோரவேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மோட்டர் மூலம் மட்டுமே மழைநீரை வெளியேற்ற முடியும். புதிய முயற்சியாக தற்போது லங்கர் கார்னர் பாலத்தில் மழைநீர் வடிகால் வேலை நடைபெறுவதை போல் இங்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...