கோவை கணபதி பகுதியில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பங்கள் பறந்தன

கோவை கணபதி பகுதியில் திங்களன்று (இன்று) இரவு சுமார் 8.30 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலையில் இருந்த மணல் மற்றும் குப்பைகள் காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 இந்நிலையில் கணபதி, சூர்யா மருத்துவமனை எதிரே சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் பலத்த காற்றின் காரணமாக அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மீது விழுந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு ஆட்டோவில் மீது விழுந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கணபதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...