சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி?


காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக  சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியை விமர்சனம் செய்யும் அளவிற்கு ரஜினி பேசியதற்கும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி  இதனை தெரிவித்தார். மேலும் இரு அணிகள் இணைப்பிற்கான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது எனவும் இரட்டை இலை மீட்கவேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறினார். காவிரி பிரச்சினையில் சத்யராஜ் படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய ஆட்சியை பற்றி விமர்சிக்கும் படி ரஜினி பேசுவது சரியல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தன்னை விமர்சனம் செய்தவர்களை பற்றி பாராட்டி பேசிய ரஜினி, ஆட்சியை விமர்சிக்கும் படி பேசி இருப்பதாகவும்  தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு நன்றாக இருப்பதற்கு சட்டம் ஓழுங்கு நன்றாக இருப்பதே காரணம் எனவும் நடிகர்கள் பேசும் போது பார்த்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...