தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர உரிமையுண்டு என தெரிவித்தார். அரசியலில் பெரியார் பாதையை பின்பற்றுவேன் என கூறிய ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தை தவறான பாதையில் நடத்திய சென்றவர் ஈவெரா என பதிலளித்தார். தமிழகத்தில் பெரியார் பாதை என்பது இந்து விரோத பாதை என கூறிய அவர், அந்த பாதையை ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் ஏற்று கொள்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும் கூறிய அவர், பாஜக தமிழக அரசியல் சூழலை பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டுபவர்கள் அரசியல் அரிசுவடி தெரியாதவர்கள் என தெரிவித்தார். பாஜகவினர் ஒன்றும் சந்நாசிகள் அல்ல எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். ஜானகி, ஜெயலலிதா சண்டையை பயன்படுத்து திமுக ஆட்சிக்கு வந்தது தவறில்லை என்றால், இதுவும் தவறு இல்லை என அவர் தெரிவித்தார். இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இந்தி படிக்கக்கூடாது என தமிழக மக்களை கிணற்று தவளைகளாக்க திமுக முயற்சிக்கிறது எனவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழிக்கு பாஜக பற்றி பேச அருகதை கிடையாது எனவும், பாஜக நிறுத்தும் வேட்பாளர் தான் குடியரசு தலைவராக முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

திகார் சிறையில் உள்ள அதிமுக துணைபொதுச்செயலாளர் தினகரனுக்கு கம்பெனி கொடுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...