பத்தாம் வகுப்பு தேர்வில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் 92.71 சதவிகிதம் - மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2030 மாணவ, மாணவியர்களில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 92.71 தேர்ச்சி சதவிகிம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2030 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தோவு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 92.71 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.24. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவிகிதத்தைவிட 1.07 சதவீதம் அதிகமாகும்.

மேலும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இராமலிங்கம் காலனி 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கோவில்மேடு 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செல்வபுரம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒப்பணக்கார வீதி 99.63 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கநாதபுரம் 98.53 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர். 

அதேப்போன்று, மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.90 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் 97.30 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராமகிருஷ்ணாபுரம் 96.99 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இர.ச.புரம் (மேற்கு) 96.93 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி செல்வபுரம் 96.43 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பாப்பநாயக்கன்பாளையம் 95.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 95 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 93.94 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 92.68 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர்காலனி 92.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பீளமேடு 90.48 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரன்பாளையம் 89.77 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி குப்பக்கோணாம்புதூர் 88.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம் 87.50 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வடகோவை 85.37 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இரத்தினபுரி 83.85 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம் 81.82 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம் 79.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 73.81 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 71.43 தேர்ச்சி சதவிகிதமும் என மொத்த்தம் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 92.71 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்கில் 13 மாணவ, மாணவியர்களும், அறிவியலில் 21 மாணவ, மாணவியர்களும், சமூக அறிவியலில் 95 மாணவ, மாணவியர்களும் ஆகமொத்தம் 129 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 41 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...