கோவை, திருப்பூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கப்பட்டு பின்னர் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வியை தொடர நடவடிக்கை எடுப்பதோடு உயர் கல்வி பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 17 பேர் தேர்வு எழுதினர். இதில் 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் தொடர்ந்து படிப்பதற்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:-

1) கே.கிறிஷ்டியன் - 419

2) இ.சுதேஷ் - 409

3) ஆர்.சரவணகுமார் - 404

4) பி.அகஸ்டின் ஆசீர்வாதம் - 390

5) எஸ்.வெண்ணிலா - 388

6) சி.ஹரிபிரியா - 381

7) எஸ்.லோகேஷ்வரன் - 377

8) ஜி.பவித்ரா - 363

9) பி.முத்துமாரி - 353

10) ரேஷ்மா - 335

11) எஸ்.சந்திர சேகர் - 332

12) எம்.நந்தினி - 324

13) ஆர்.காளீஸ்வரி - 306

14) ஆர்.பானு பிரியா - 285

15) பி.பூஜா - 275

16) என்.வசந்தகுமார் - 267

17) டி.கார்த்திக் - 231

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...