கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர் ஒருவர் கைப்பையில் மதுபாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மண்டல தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்து செல்கின்றனர்.

மேலும், கோவை மத்திய ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இதன் காரணமாக, இப்பகுதியைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி போல் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த கைப்பையில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

இதனை அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பேருந்து நிறுத்தத்திலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...