சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாடியதாகக் கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலை காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 சூதாட்ட சீட்டுகள் மற்றும் ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் சிலர் கும்பலாக கூடி பணம் வைத்து சூதாடுவதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் 6 பேர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் பி.என். பாளையம் பேரநாயுடு தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), ரத்தினபுரி லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் (51), மணியகாரம்பாளையம் பூசாரிபாளையத்தைச் சேர்ந்த ஹரிஹசா (66), கரும்புக்கடை சாரமேடு முக்தார் மசூதி தெருவைச் சேர்ந்த ஷாஜகான் (39), காந்திபுரம் 100 அடி சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (65) மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பள்ளம்பட்டியைச் சேர்ந்த சக்திவேலவன் (47) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் பந்தயத் தொகையாக வைத்திருந்த ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசதீஷ்கண்ணன் தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...