கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். திருமண தடைகள் நீங்க சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

தேங்காய், பழம், பட்டுப்புடவை, வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், வளையல், இனிப்பு, காரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சீர் வரிசை தட்டுக்கள் வைத்து யாகங்கள் நடத்தப்பட்டன. மாலைகள் மாற்றி, மாங்கல்ய சிறப்பு பூஜைக்குப் பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெற்றது.



இந்த திருமண விழாவில் பெரிய தடாகம், சின்ன தடாகம், துடியலூர், சோமையம்பாளையம், டிவிஎஸ் நகர், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற அன்னையின் திவ்ய கல்யாண தரிசனத்தைப் பெற்று அருளாசி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் ஆன்மீக முன்னேற்றம் நிலவ வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள், இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் வடை பாயாசத்தோடு கல்யாண விருந்தும் பரிமாறப்பட்டது.

ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தனது அருளாசியில், "இத்திருக்கல்யாணத்தில் பங்கேற்பதன் மூலம் திருமண தடைகள் நீங்கி திருமணயோகம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் வளம் பெருகும். ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஐஸ்வர்யம் கிடைக்கும். சந்ததி விருத்தி மற்றும் தலைமுறைகளுக்கும் மங்களகரமான வாழ்வு அமையும். ஆன்மீக முன்னேற்றம், தெய்வீக அருளும் பெருகும்" என்று தெரிவித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் திறம்பட செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...