மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை காணிக்கையாக கிடைத்தது. கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.


Coimbatore: முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக மொத்தம் ரூ.76.25 லட்சம் வசூலானது.

கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நிரந்தர உண்டியலில் ரூ.72.37 லட்சம், காசோலை உண்டியலில் ரூ.2.32 லட்சம், திருப்பணி உண்டியலில் ரூ.1.55 லட்சம் என மொத்தம் ரூ.76.25 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

இதனுடன், 50.500 கிராம் தங்கம், 2.40 கிலோ வெள்ளி மற்றும் 35.600 கிலோ பித்தளை ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன.

உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்கார் ஜெயக்குமார், இணை ஆணையர்கள் விமலா மற்றும் சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர்.

சமீபத்தில் கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, மருதமலை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...