துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: துணை குடியரசுத் தலைவர் கோவை மாநகரத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன், உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிற்றா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஜூலை 21ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 23ஆம் தேதி காலை 11 மணி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தடை உத்தரவை மீறி ட்ரோன்இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
வழக்கமாக ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன், உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிற்றா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஜூலை 21ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 23ஆம் தேதி காலை 11 மணி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தடை உத்தரவை மீறி ட்ரோன்இயக்குபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.