கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 2026 வரை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.97 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் Bio Metric அல்லது Iris பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர்.
மாவட்டத்தில் Antyodaya Anna Yojana குடும்ப அட்டைகள் (AAY), Priority Household குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் Non-Priority Household குடும்ப அட்டைகள் (NPHH) பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு Point of Sale (PoS) இயந்திரத்தில் விரல் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பணியில் AAY அட்டைகளில் 95.03%, PHH அட்டைகளில் 95.10% மற்றும் NPHH அட்டைகளில் 84.48% மட்டுமே நிறைவடைந்துள்ளது. கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை AAY அட்டைகளில் 7,033, PHH அட்டைகளில் 49,324 மற்றும் NPHH அட்டைகளில் 3,41,425 ஆக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வெளியிட்ட அறிவிப்பின்படி, National Food Security Act-ன் கீழ் பயன்பெறும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய நியாய விலைக் கடைகளிலோ அல்லது அருகில் உள்ள நியாய விலைக் கடைகளிலோ ஜூலை 31, 2026 தேதிக்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடுபட்டுள்ள உறுப்பினர்களுக்கு கைரேகை பதிவு செய்வதற்கு வசதியாக, ஜூலை 11, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பிற்பகல் நேரங்களில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்வார்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கைரேகை பதிவு செய்யாத பயனாளிகள் எதிர்காலத்தில் ரேசன் பொருட்களை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால், உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் Antyodaya Anna Yojana குடும்ப அட்டைகள் (AAY), Priority Household குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் Non-Priority Household குடும்ப அட்டைகள் (NPHH) பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு Point of Sale (PoS) இயந்திரத்தில் விரல் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பணியில் AAY அட்டைகளில் 95.03%, PHH அட்டைகளில் 95.10% மற்றும் NPHH அட்டைகளில் 84.48% மட்டுமே நிறைவடைந்துள்ளது. கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை AAY அட்டைகளில் 7,033, PHH அட்டைகளில் 49,324 மற்றும் NPHH அட்டைகளில் 3,41,425 ஆக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வெளியிட்ட அறிவிப்பின்படி, National Food Security Act-ன் கீழ் பயன்பெறும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய நியாய விலைக் கடைகளிலோ அல்லது அருகில் உள்ள நியாய விலைக் கடைகளிலோ ஜூலை 31, 2026 தேதிக்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடுபட்டுள்ள உறுப்பினர்களுக்கு கைரேகை பதிவு செய்வதற்கு வசதியாக, ஜூலை 11, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பிற்பகல் நேரங்களில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்வார்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கைரேகை பதிவு செய்யாத பயனாளிகள் எதிர்காலத்தில் ரேசன் பொருட்களை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால், உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.