வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.


கோவை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்ததால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்குச் சென்றோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.



மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...