வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.


கோவை: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை புதன்கிழமை காலையிலும் தொடர்ந்ததால், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அலுவலகம் மற்றும் பணிக்குச் சென்றோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை, வெள்ளமலை, பன்னிமேடு, சேக்கல்முடி, சோலையாறு அணை, மலுக்கப்பாறை, கருமலை, பச்சமலை, கவர்க்கல், தளனார், சக்தி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பதிவானது. இதனால் காலை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், பனிமூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் பயணித்தனர்.



மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மழையிலேயே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

மழை பதிவின்படி, சின்னக்கல்லாரில் 27 மி.மீ., சோலையாறு அணை பகுதியில் 24 மி.மீ., வால்பாறையில் 21 மி.மீ., சின்கோனாவில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, வால்பாறையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள சோலையாறு அணைக்கு 853.30 கனஅடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. 165 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 83 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், அணையிலிருந்து 1,365 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், வால்பாறை மலைப்பகுதிகளில் மேலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...