பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராமுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் London World Book of Records அமைப்பின் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டது. தனுஷ்கோடி முதல் கோவை வரை 500 கிலோமீட்டரை 15 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்த சாதனைக்காக இவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.


Coimbatore: பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணத்தில் உலக சாதனை படைத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சைக்கிளிஸ்டுமான ஜி.டி. விஷ்ணு ராம் அவர்களுக்கு, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

London World Book of Records என்ற அமைப்பின் சார்பில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் House of Commons அவையில் நடைபெற்ற சர்வதேச விழாவில், இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, சைக்கிளிஸ்டும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணு ராம் சமீபத்தில் தனுஷ்கோடி முதல் கோவை வரை, 500 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 15 மணி நேரம் 8 நிமிடங்களில் மிக வேகமாக கடந்தார்.


இந்த வேகமான சைக்கிள் பயணம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜி.டி. விஷ்ணு ராம் படைத்த உலக சாதனைக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில், தென்னிந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற ஒரே நபர் ஜி.டி. விஷ்ணு ராம் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச அங்கீகாரம் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக கோயம்புத்தூர் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.


இது குறித்து சமூக ஆர்வலர் சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராம் கூறுகையில், "இந்த அங்கீகாரமானது சமூக விழிப்புணர்வு பயணத்திற்கு ஒரு புதிய தொடக்கம். சைக்கிளிங் வாயிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கவும் தொடர்ந்து செயல்படுவேன்" என்றார்.


"2026-ஆம் ஆண்டில் 2026 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து, போதைப்பொருள் இல்லாத தமிழகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை வீரியத்துடன் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் Joseph Vijay அவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக எங்களது பயணம் அமையும்" என சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராம் தெரிவித்தார்.

Newsletter

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...