மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் ஜூன் 25-க்குள் வரவேற்கப்படுகின்றன.


Coimbatore: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூகப்பணியாளர்கள், மருத்துவர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த விருதுகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

தனிநபர் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கிய சிறந்த மருத்துவர், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மாநில விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் ஜூன் 25, 2026-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன் 25 மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கோவைமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 அல்லது 94999 33471 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...