தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முகாம் நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதீனங்களுக்கு சொந்தமான கோயில் யானைகளுக்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் மீண்டும் முகாமை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, யானைகள் கட்டி வைக்கப்படும் பகுதிகள், பாகன்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம், தீவனங்கள் சேமிக்கும் அறைகள், பவானி ஆற்றில் யானைகள் குளிக்கும் இடங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள் மற்றும் ஷவர் குளியல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.



மேலும், வனத்துறையினரின் உதவியுடன் வனவிலங்குகள் முகாமிற்குள் நுழையாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சோலார் மின்வேலி அமைப்பது, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க ஏற்ற இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்வின்போது வனபத்ரகாளியம்மன் கோயில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான சரவணன் (கூடுதல் பொறுப்பு), கோவை கோட்ட பொறியாளர் ரேவதி, உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல், கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், தனராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் சரக ஆய்வர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கடைசியாக, 2021-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதுவரை முதுமலை தெப்பக்காட்டில் இரண்டு முறையும், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 11 முறையும் என மொத்தம் 13 முறை யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...