தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முகாம் நடைபெறும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல்வாழ்வு முகாமை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதீனங்களுக்கு சொந்தமான கோயில் யானைகளுக்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் மீண்டும் முகாமை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, யானைகள் கட்டி வைக்கப்படும் பகுதிகள், பாகன்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம், தீவனங்கள் சேமிக்கும் அறைகள், பவானி ஆற்றில் யானைகள் குளிக்கும் இடங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகள் மற்றும் ஷவர் குளியல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.



மேலும், வனத்துறையினரின் உதவியுடன் வனவிலங்குகள் முகாமிற்குள் நுழையாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சோலார் மின்வேலி அமைப்பது, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க ஏற்ற இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்வின்போது வனபத்ரகாளியம்மன் கோயில் துணை ஆணையரும் செயல் அலுவலருமான சரவணன் (கூடுதல் பொறுப்பு), கோவை கோட்ட பொறியாளர் ரேவதி, உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கவேல், கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், தனராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் சரக ஆய்வர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



கடைசியாக, 2021-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. இதுவரை முதுமலை தெப்பக்காட்டில் இரண்டு முறையும், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 11 முறையும் என மொத்தம் 13 முறை யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...