சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப் பிறகு 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 850 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐஜி ரம்யா பாரதி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் டிஐஜி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, அறிவியல் பூர்வமான தடயங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற சில வாரங்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வழிவகுக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...