காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் பகுதியில், தனியார் காகித ஆலைக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைக்கு சென்னையில் இருந்து 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த துரை (40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை தேவனாபுரம் அருகே வந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த பேப்பர் கழிவுகள் சாலையில் சிதறின. மேலும், லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நள்ளிரவு நேரமாக இருந்ததால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிக பாரம் காரணமாக முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...