மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கோவை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார், தனது புதுப்பிக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்து மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருமார்களை அழைத்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்று தனது அலுவலக பணிகளைத் தொடங்கினார்.

இந்நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் ஒருவர் தவறவிட்ட மூன்று பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்து நேர்மை

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...