தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய நுழைவாயில் மற்றும் வளாகப் பகுதிகளில் மொத்தம் 600 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் சமயங்களில் வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏற்கனவே இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வரும் கோவை விமான நிலையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகையின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது. நுழைவாயிலில் மூன்று லேன்கள் இருந்தபோதிலும், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து மூன்று விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறிய நேரத்தில், அரசியல் பிரமுகரை வரவேற்க வந்த வாகனங்களால் நுழைவாயில் பகுதி முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண விமான நிலைய நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...