கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது. 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதியுடன், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையின் பெருமையான ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனம் தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.2026) திறந்தது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் புதிய கிளையை திறந்து வைத்தார். முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி, ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலசந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ் தாமோதரசாமி மற்றும் எக்ஸிகியூட்டிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளையில் பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிளையின் முதல் விற்பனையை எஸ்கேயம் (SKM) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சிவகுமார் தொடங்கி வைத்தார். அதை அவன்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ். குமரன் பெற்றுக்கொண்டார்.

மேலும், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

100 கார்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அன்னபூர்ணா குழும ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...