கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நூல் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழகத்தில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திற்கும் குறைவான கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அமைச்சர் நியமிக்கும்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. மேலும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அப்போது ஜவுளித்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்” என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...