“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சா போதைப்பொருளை Coimbatore City Prohibition Enforcement Wing போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.



போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட ஐஷர் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பொருட்கள் ஏற்றுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியில் இருந்த கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் அருண்குமார் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மணிகண்டன் ஏற்கனவே E3 சரவணம்பட்டி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி (HS 01/2021) என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குற்ற எண் 106/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...