வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் விவரங்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது,


கோவை:

நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வடகோவை ரயில் நிலையம் அருகே அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தண்டவாளத்தில் கடுமையாக காயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர், முழு முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை இதுவரை தெரியவில்லை. அவர் கையில் பச்சைக் குத்து இருந்ததுடன், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்தார், தற்செயல் விபத்தா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...