சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டதால் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது POCSO சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.




மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கண்ணம்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை குற்றவாளி கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் POCSO சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தினார்.




குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவளை அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதாகவும் ஐஜி தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...