புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்றும் திருத்தேர் திருவிழா பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. கரகம் வீதியுலா, திருத்தேர் பவனி, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை : கோவை புதுசித்தாபுதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவமும் திருத்தேர் திருவிழாவும் பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மே 5 முதல் மே 22, 2026 வரை நடைபெற்ற நிலையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அபிஷேகங்கள், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவின் சிறப்பு அம்சங்களாக திருக்கல்யாணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக மே 20ஆம் தேதி காலை கரகம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. தொடர்ந்து மதியம் மஹா ரதம் எனப்படும் திருத்தேர் சிறப்பாக புறப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றனர்.



மேலும், விழா நாட்களில் பக்தர்களுக்காக அன்னதானம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குடும்பத்துடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...