கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்களில் கட்டணம் கேட்கும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியர் Pawan Kumar Giriyappanar எச்சரித்துள்ளார். பொதுமக்கள் நேரடியாக அலுவலகத்தை அணுகலாம்.


Coimbatore: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வழங்கும் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் சமீப காலமாக WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற சமூக வலைதளங்களில் இந்த சேவைகளை கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக கூறி பல போலி விளம்பரங்களும் காணொளிகளும் பரவி வருகின்றன. இவை முற்றிலும் ஏமாற்று வேலைகள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் எவரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த சேவைகளை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அணுகி எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் போலி விளம்பரங்களுக்கு இரையாகாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசு வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...