புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேசமயம், திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் நேர்மையான மற்றும் மக்கள் நல ஆட்சியை முன்னுதாரணமாக கொண்டு, புதிய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் தெய்வங்களின் அருளும், மக்களின் ஆதரவும் புதிய அரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், முதல்வரின் ஆட்சி மக்கள் நல மறுமலர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்கள் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.

அதில், முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோயில்களுக்கு அவர்களது வாரிசுகள் மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும், பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக அறநிலைத்துறை அங்கீகரிக்க வேண்டும், மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோயில் நிர்வாக குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...