உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலவச BP பரிசோதனை, உணவு ஆலோசனை, பிசியோதெரபி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு, GKNM Hospital மருத்துவமனையின் IOP வளாகத்தில் மே 18 முதல் மே 20 வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியை GKNM Hospital தலைமை செயல் அதிகாரி Dr. ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். அவருடன் IOP மருத்துவ இயக்குனர் Dr. ராகவேந்திரா, மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக BP பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோதெரபி துறையின் உடற்பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோசனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மே 18ஆம் தேதி இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் "உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்" தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.



மே 19ஆம் தேதி இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மே 20ஆம் தேதி மாற்று மருத்துவத் துறையினரால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், "உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.



மேலும், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் GKNM Hospital தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச ஆலோசனை முகாம்களை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...