உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலவச BP பரிசோதனை, உணவு ஆலோசனை, பிசியோதெரபி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு, GKNM Hospital மருத்துவமனையின் IOP வளாகத்தில் மே 18 முதல் மே 20 வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியை GKNM Hospital தலைமை செயல் அதிகாரி Dr. ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். அவருடன் IOP மருத்துவ இயக்குனர் Dr. ராகவேந்திரா, மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக BP பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோதெரபி துறையின் உடற்பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோசனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மே 18ஆம் தேதி இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் "உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்" தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.



மே 19ஆம் தேதி இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மே 20ஆம் தேதி மாற்று மருத்துவத் துறையினரால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், "உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.



மேலும், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் GKNM Hospital தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச ஆலோசனை முகாம்களை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...