ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


Coimbatore: ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இத்துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நெசவாளர்கள் விசைத்தறி தொழிலின் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்புகளுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் பெடல் தறிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினந்தோறும் மூன்று கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு மின்சார சலுகை, நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நெசவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக ஜவுளித்துறை இந்திய அளவிலும், உலகளவிலும் முன்னிலை வகிக்க, ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை நியமிக்கும் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...