கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். குப்பை பிரித்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு பெரியார் வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் தினசரி முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.





அதேபோல, பீளமேடு கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த சாக்கடை மண்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியையும் கவுன்சிலர் நேரில் ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்தார்.





மேலும், பீளமேடு பாரதி காலனி ஐந்தாவது வீதி பகுதியில் ஏற்பட்டிருந்த சாக்கடை அடைப்பை ஏர் கம்ப்ரசர் லாரி மூலம் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்து மக்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி பிரிந்தார் உடன் இருந்தார்.





பீளமேடு சாய்பாபா கோயில் அருகில் தினசரி குப்பை சேகரிக்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணி சரிவர நடைபெறுவதை உறுதி செய்தார். மக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.

வார்டு 27 பீளமேடு பகுதியில் தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியிருப்போரின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கவுன்சிலர் அம்பிகா தனபால் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...