கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபோதையில் வரும் சிலர் சாலையில் தகராறு செய்வதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பகுதியில் பல்வேறு கோவில்களும் உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...