“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறையிலும் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore:

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றியும், தண்ணீர் வசதி இன்றியும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையின் செயல்படும் சிறுநீரக வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தினமும் தங்கி உள்ளனர். ஆனால், இத்தனை பேருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கான கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருப்பதால், பெண் நோயாளிகள் மற்றும் பெண்கள் உறவினர்கள் ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதாரமற்ற நிலை அவர்களின் உடல்நலத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கழிப்பறைகளில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதுடன், தண்ணீர் இல்லாத நிலை, உணவுக் கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் வயதான நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறுகையில், “கடந்த 7 மாதங்களாக இந்த வார்டுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை. மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பல வார்டுகளிலும் இதே நிலை நீடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை பெரிதும் நம்பி வரும் பொதுமக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உரிய சுகாதாரத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...